அப்புவின் காவல் மார்ச் 3ம் வரை நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு:

Appuஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கு மற்றும் சந்தனக் கட்டைகள் கடத்தப்பட்ட வழக்கில் கூலிப் படைத் தலைவன் அப்புவின் சிறைக் காவல்மார்ச் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பு, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் கைதுசெய்யப்பட்டுள்ளான். அவனது சிறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அவன் கடலூர் சிறையிலிருந்து சென்னைசைதாப்பேட்டை 63வது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டான்.

அப்போது அவரது காவலை மார்ச் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து எழும்பூர் பொருளாதாரக் குற்றத் தடுப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு போகப்பட்ட அப்பு, அங்கு நீதிபதி பெருமாள் முன்ஆஜர்படுத்தப்பட்டான்.

சந்தனக் கட்டை கடத்தல் வழக்கில் அவனது காவலை நீதிபதி பெருமாள் மார்ச் 3ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் பின்னர் அப்புமீண்டும் கடலூர் சிறைக்கு கொண்டு போகப்பட்டான். அப்பு குண்டர் சட்டத்திலும் கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+