ஜெயேந்திரர்: வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் 1 ரூபாய் அபராதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jeyandrarநீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக வழக்கறிஞர் ஒருவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ. 1 அபராதம் விதித்தது.

கந்தசாமி சிங் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.அதில், ஜெயேந்திரர்போன்ற பெரிய மனிதர்களை கைது செய்யக் கூடாது. அவர் மீதான நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கற்பக விநாயகம், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைப் பார்த்ததும் நீதிபதிகள்கோபமடைந்தனர்.

இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், மனுதாரர்கந்தசாமி சிங்குக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர்.

இதைக் கேட்டதும் வெலவெலத்துப் போன கந்தசாமி சிங், தன்னிடம் அந்த அளவுக்கு பண வசதி இல்லை என்று கூறி, இனிமேல்இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய மாட்டேன் என்று கெஞ்சினார்.

இதைத் தொடர்ந்து அபராதத் தொகையை ரூ. 1 ஆக குறைத்து உத்தரவிட்டார் நீதிபதி கற்பகவிநாயகம்.

பின்னர் கோர்ட் அலுவலகத்தில் போய் ஒரு ரூபாய் அபராதத் தொகையை கட்டி விட்டு அவசரமாக நடையைக் கட்டினார் வழக்கறிஞர்கந்தசாமி சிங்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+