மானியம்: ஜெவுக்கு திரைப்பட சபை கோரிக்கை
சென்னை:
திரைப்படங்களுக்கு மானியம் தருவது தொடர்பான தமிழக அரசின் கொள்கை முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் முக்தா சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கும் படங்களுக்குவழங்கப்படும் மானிய முறையில் தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டுள்ளது.
அதாவது, குறைந்தபட்சம் 8 பிரிண்டுகள் போடப்படும் படங்களுக்கே மானியம் என்று அரசு தீர்மானித்துள்ளது.
இது குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை மிகவும் பாதித்துள்ளது. 8 பிரிண்டுகள் வரைபோடுவது என்பது குறைந்த பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமையாகும். அதற்காகவேஅவர்களுக்கு ரூ. 6 லட்சம் வரை செலவாகும்.
எனவே முன்பிருந்ததைப் போலவே எந்தவித நிபந்தனையும் இன்றி குறைந்த பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களுக்குஅரசு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முக்தா.












Click it and Unblock the Notifications