கடும் வெயிலால் தகதகக்கும் வேலூர்
வேலூர்:
தமிழகத்தை வெயில் கடுமையாகக் கொளுத்த ஆரம்பித்துவிட்ட நிலையில் வழக்கம்போல் மாநிலத்திலேயே மிக அதிகமானவெப்பத்தால் தகிக்க ஆரம்பித்திருக்கிறது வேலூர் மாவட்டம்.
இந்த மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. பொட்டல் வெளிகளே அதிகம். அத்துடன் மொட்டையான மலைக்குன்றுகளும் சேர்ந்து கொண்டு இந்த மாவட்டத்தின் வெப்பத்தை எப்போதுமே உச்சத்தில் வைத்திருக்கின்றன.
பிப்ரவரி மாதமான இப்போதே கடந்த 5 நாட்களாக வேலூரில் 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
கடந்த 10ம் தேதி வரை 73 டிகிரியாக இருந்த வெப்பம் 5 நாட்களில் 100 டிகிரியைத் தாண்டிவிட்டது.
15ம்தேதி 101 டிகிரி, 16ம் தேதி 104, 17ம் தேதி 102, 18ம் தேதி 102, 19ம் தேதி 100.04 என்ற அளவுக்கு தகிக்கும் வெப்பம்பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் இரவில் வெப்பம் அப்படியே உல்டாவாகி கடும் குளிர் நிலவுகிறது. அதிகாலையில் பனி மூட்டமும் நிலவுகிறது.
சென்னையில்..
வேலூரை ஒட்டிய சென்னையிலும் கடும் வெயில் வீசுகிறது. அதே நேரத்தில் அதிகாலையில் பனி மூட்டம் நிலவுகிறத. இதனால்காலை நேர விமான சர்வீஸ்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காலையில் தரையிறங்கும் பல விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுவருகின்றன.