For Daily Alerts
Just In
"அம்மா" பிறந்த நாள்: நள்ளிரவில் கேக் வெட்டும் தொண்டர்கள்
மதுரை:
முதல்வர் ஜெயலலிதாவின் 57வது பிறந்த நாளையொட்டி மதுரை எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் இன்று நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு 57 அடி நீளமுள்ள பிரமாண்டமான கேக் வெட்டப்படுகிறது.
57 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியும், நாட்டிய நிகழ்ச்சிகளுக்கும் நள்ளிரவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானவேடிக்கைக்கும் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், செ.மா. வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் நடத்தினார்கள்.
Comments
Story first published: Wednesday, February 23, 2005, 5:30 [IST]