ஜெயேந்திரர் முன் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
ரவி சுப்பிரமணியம் மிரட்டப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் தொடர்பாக காஞ்சி மடத்தின் வழக்கறிஞர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யலாம் என அஞ்சுவதால், முன் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தணிகாச்சலம் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிறையில் ரவி சுப்பிரமணியத்தை சந்திக்க சங்கர மட வழக்கறிஞர்களுக்கு சிறை நிர்வாகம் வழங்கிய அனுமதிக் கடிதத்தை தாக்கல் செய்யுமாறு ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கே.எஸ்.தினகருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் அந்தக் கடிதம் தங்களிடம் இல்லை என்று தினகர் பதிலளித்தார். அதேபோல, அரசுத் தரப்பிடம் சில விளக்கங்களை நீதிபதி கேட்டார். அதற்குப் பதிலளிக்க அவகாசம் தேவை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து விசாரணையை நாளை மறுதினத்திற்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.












Click it and Unblock the Notifications