ஏட்டு கண்ணனின் ஜாமீன் நிபந்தனை ரத்து
மதுரை:
ஜெகஜால ஜெயலட்சுமி வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகியிருக்கும் ஏட்டு கண்ணனின் நிபந்தனையை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்துள்ளது.
ஜெயலட்சுமியால் குற்றம் சாட்டப்பட்ட காக்கிகளில் ஒருவர் இந்த ஏட்டு கண்ணன். இவரை ஜெயலட்சுமியின் பாதுகாவலுக்கு இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வைக்க, ஆடே பயிரை மேய்ந்த கதையாய் ஜெயலட்சுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்தார்.ர்
மேலும் ஜெயலட்சுமியின் குடும்பத்தினரைக் கடத்திய வழக்கிலும் சம்பந்தபட்டவர் இவர், கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.ர்
வாரந்தோறும் திங்கள் மற்றும் புதன் ஆகிய இரு தினங்களும் சிவகாசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.ர்
இந்த நிபந்தனையை ரத்து செய்யக் கோரி கண்ணன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்திருந்தார்.ர்
இம் மனுவை நீதிபதி கண்ணதாசன் விசாரித்தார். சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திரிபாதி, கண்ணனுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்துவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றார்.ர்
இதைத் தொடர்ந்து நிபந்தனையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.ர்












Click it and Unblock the Notifications