For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் தொடரும் ஆக்கிரமிப்பு அகற்றம்: ஒரே நாளில் 12 கோவில்கள் தரைமட்டம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 12 கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்ற மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2 வாரமாக மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீவிர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக மதுரை நகரின் சாலைகள் அகலமாகியுள்ளன, பல தெருக்களும் அகலமாகியுள்ளன. மதுரை நகரமே விசாலமாகி வருகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது 12 சாலையோர கோவில்களை அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இவற்றில் பல கோவில்கள் மாரியம்மன், பிள்ளையார் கோவில்களாகும்.

செவ்வாய்க்கிழமையன்று மாரியம்மன் கோவில்கள் இடிக்கப்பட்டதால் பெண்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். நாளைக்கு வந்து இடித்து விட்டுப் போங்களேன் என்று அவர்கள் அதிகாரிகளிடம் கோரினர். ஆனாலும் தங்களது கடைமையைத்தான் செய்வதாக கூறிய அதிகாரிகள் கோவில்களை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளினர்.

பல இடங்களில் கோவில்களில் இருந்த பொருட்களை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே எடுத்துக் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற உதவினர்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X