திமுக நடத்தும் 1000 பொதுக் கூட்டங்கள்
சென்னை:
தி.மு.க.வின் சார்பில் மார்ச் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 1000 பொதுக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. முதல் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் கலந்து கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் 1000 பொதுக் கூட்டங்களை நடத்த சமீபத்தில் நடந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தற்போது பொதுக்கூட்டங்கள் குறித்த விவரத்தை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கம்பம் செல்வேந்திரன் வெளியிட்டுள்ளார்.
1000 பொதுக் கூட்டங்களை தொடங்கி வைக்கும் விதமாக பிப்ரவரி 28ம் தேதி சென்னை தியாகராய நகரில் தி.மு.க. தலைவர் கருணாநதி கலந்து காள்ளும் முதல் கூட்டம் நடைபெறுகிறது.
அதன் பின்னர் பொதுச் செயலாளர் அன்பழகன் துறைமுகத்தில் மார்ச் 2ம் தேதி ஆவடியில் 3ம் தேதியும், தென் சென்னையில் 5ம் தேதியும், திருவண்ணாமலையில் 6ம் தேதியும், ஆரணியில் 7ம் தேதியும் பேசுகிறார்.
துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் மார்ச் 9ம் தேதி சென்னை வேளச்சேரியில் பேசுகிறார். பொருளாளர் ஆற்காடு வீராசாமி வேலூர் (மார்ச்1), குடியாத்தம் (மார்ச் 3) ஆகிய தேதிகளில் பேசுகிறார்.
மார்ச் 3, 4ம் தேதிகளில் துரைமுருகன் சேலத்திலும், 6ம் தேதி சென்னையிலும் பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற ஊர்களில் பேசும் தி.மு.க. பிரகர்கள குறித்த பட்டியலையு ம் செல்வேந்திரன் அறிவித்துள்ளார்.