தலைமைச் செயலகம் அருகே தீவிபத்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தலைமைச் செயலகம் அருகே இன்று சிறிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது.
சென்னை துறைமுகத்தின் 10வது நுழைவாயில் தலைமைச் செயலகம் அருகே உள்ளது. இப் பகுதியில் நேற்று முன்தினம் பெரும் தீவிபத்து ஏற்பட்டு 70,000 டன் நிலக்கரி எரிந்து சாம்பலானது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தலைமைச் செயலகம் அருகே இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு செல்ல நடைபாலம் உள்ளது. இந்த பாலத்துக்கு அருகே உள்ள புதர்ப் பகுதியில் இன்று பிற்பகல் 1 மணியளவில் தீப்பிடித்துக் கொண்டது.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீவிபத்து சிறிய அளவிலேயே இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications