For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளங்கோவனுக்கு ஆற்காடு மூலம் திமுக பதிலடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி தவிர வேறு யாருக்கும் தனிப்பட்ட முறையில் மரியாதை கிடையாது என்றுஆற்காடு வீராசாமி கூறினார்.

திமுக பொருளாளரான ஆற்காடு வீராசாமி கூறுகையில், திமுக கூட்டணியை ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும்உடைக்க முடியாது. அரசியல் கட்சிகளில் என்னைப் போன்று பல தலைவர்கள் உள்ளார்கள்.

ஆனால் நாங்கள் சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். திமுக தலைவர் கருணாநிதியும், காங்கிரஸ்தலைவி சோனியா காந்தியும் சொன்னால் தான் அக் கட்சித் தொண்டர்கள் ஓட்டுப் போடுவார்கள்.

மற்ற தலைவர்கள் (இளங்கோவன்) சொன்னால் 10 பேர் கூட ஓட்டுப்போட மாட்டார்கள். ஏனென்றால்அவர்களுக்கென்று தனிப்பட்ட மரியாதை கிடையாது.

திமுகவில் 70 லட்சம் தொண்டர்கள் உள்ளார்கள். அவர்கள் அனைவரின் சார்பில் கருத்துக் கூறும் அதிகாரம்தலைவர் கருணாநிதிக்கு மட்டுமே உள்ளது.

டாக்டர் ராமதாஸ், வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் இந்தக் கூட்டணிதொடரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். சோனியா காந்தியும் இதில் தெளிவாக உள்ளார்.

நாளை உயர்நிலைக் குழுவில் எடுக்கப்படும் முடிவு குறித்து இப்போது எதுவும் கூறமுடியாது. தலைவர் கருணாநிதிதான் முடிவெடுப்பார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X