இங்கிலாந்து: பாகிஸ்தான் விமானத்தில் தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
மான்செஸ்டர்:
இங்கிலாந்தின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் கிளம்பத் தயாராக இருந்த பாகிஸ்தான் விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதையடுத்து 352 பயணிகளும் உடனடியாகத் தரையிறக்கப்பட்டனர்.
கனடாவின் டொரான்டோ நகரில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காகமான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அந்த போயிங் 777 விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து 340பயணிகளும் 12 விமான சிப்பந்திகளும் உடனடியாக இறக்கப்பட்டனர்.
விமானத்தின் கீழே சரக்குகள் ஏற்றும் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டுவிட்டது. அவரசமாகத்தரையிறக்கப்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் 2 பயணிகள் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications