கல்யாண வீடா? கருணாநிதிக்கு காளிமுத்து "சூடு"
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத்திற்கு வந்து கலந்து கொள்ளுங்கள் என்றுஅழைப்பு விடுப்பதற்கு அது என்ன கல்யாணவீடா என்று சபாநாயகர் காளிமுத்து திமுக தலைவர் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூடவுள்ளது குறித்து செய்தியாளர்களிடம் காளிமுத்துபேசுகையில்,
சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களது கடமையை மறக்காமல் சபைக்கு வந்து பணியாற்ற வேண்டும்.மக்கள் அவர்களுக்கு வாக்களித்து சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளது, அவர்கள் சார்பில் குறைகளை அரசிடம்கூறுவதற்காகத்தான்.
எனவே, திமுக தலைவர் கருணாநிதிக்கு, சபைக்கு வந்து கலந்து கொள்ளுங்கள் என்று தனியாக அழைப்பெல்லாம்விடுக்க முடியாது. இது என் வீட்டு கல்யாணம் அல்ல, சட்டசபைக் கூட்டம். அவராகத்தான் வர வேண்டும். அதுஅவரது கடமை.
முரசொலியில் சட்டசபைக் கூட்டம் குறித்து திருக்குறளை மேற்கோள் காட்டி கருணாநிதி இன்று ஒரு கவிதைஎழுதியிருக்கிறார். அதில், சட்டமன்றத்தை பற்றி அவதூறாகக் கூறியிருக்கிறார். அது முறையல்ல.
திமுக உறுப்பினர்களும், தாங்கள் பணியாற்றுகின்ற அவையை மரியாதைக் குறைவாக குறிப்பிடுவது சரியல்ல.கருணாநிதி திருக்குறளை சரியாகப் புரிந்து கொண்டாரா என்பதில் சந்தேகம் வருகிறது என்றார் காளிமுத்து.












Click it and Unblock the Notifications