பிகார் ஆட்சி: சோனியாவை சந்தித்தார் லாலு
டெல்லி:
பிகாரில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் ரயில்வேஅமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் இன்று சந்தித்துப் பேசினார்.
சோனியாவின் இல்லத்தில் இந்த 30 நிமிட சந்திப்பு நடந்தது.
பிகாரில் ராப்ரி தலைமையில் மீண்டும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், இருகட்சிகளுக்கும் சேர்த்து 84 எம்எல்ஏக்களே உள்ளனர்.
மேலும் பல சிறிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவைப்படும் 122 எம்எல்ஏக்கள் இல்லை.
லோக் ஜன் சக்தி தலைவரும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவருமான ராம்விலாஸ் பாஸ்வான் லாலுவை ஆதரிக்கப் போவதில்லை என்றதனது நிலையில் தொடர்ந்து பிடிவாதமே உள்ளார். அவரை முதல்வராக்கவும் வெளியில் இருந்து ஆதரவு தரவும் பாஜக ஆசை காட்டிவருகிறது. இதையும் பாஸ்வான் ஏற்கவில்லை.
இதற்கிடையே பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை பாட்னாவில் நடக்கிறது.












Click it and Unblock the Notifications