For Daily Alerts
Just In
ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கில் ரகு கைது
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் விஜயேந்திரரின் தம்பி ரகு இன்று கைது செய்யப்பட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி ரகு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கடந்த ஜனவரி 22ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது.
அதனையடுத்து சங்கரராமன் வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந் நிலையில்ஆடிட்டர் வழக்கிலும் அவர் இன்று கைது செய்யப்பட்டார். அதற்கான வாரண்ட் உத்தரவை ரகுவிடம் போலீஸார் இன்று அளித்தனர்.
இந்த வழக்கில் சென்னை பெருநகர நீதிமன்றத்தில் ரகு நாளை ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Story first published: Sunday, March 6, 2005, 5:30 [IST]