For Daily Alerts
Just In
"6250 தாழ்த்தப்பட்டோர் கோவில்கள் புனரமைப்பு"
சென்னை:
தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 6,250 கோவில்கள்புனரமைக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர் வசிக்கும் காலனிகளில் உள்ள கோவில்களைப் புனரமைக்க முதல்வர் உத்தரவிட்டார். அதை ஏற்றுதலா ரூ. 25,000 மதிப்பீட்டில் 6.250 கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல கோவில் அன்னதானத் திட்டத்தையும் விரிவுபடுத்த முதல்வர் உத்தேசித்துள்ளார். தற்போது 171கோவில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ராமசாமி.
Comments
Story first published: Monday, March 7, 2005, 5:30 [IST]