தென் ஆப்பிரிக்காவில் 3 இந்திய வம்சாவளியினர் கொலை
டர்பன்:
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தடுத்து நடந்த மூன்று கடத்தல், கொள்ளைச் சம்பவங்களில் 3 இந்திய வம்சாவளியினர் கொல்லப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு இந்தியர்களிடையே அச்சம் பரவியுள்ளது.
சாட்ஸ்வொர்த் என்ற இடத்தில் ஒரு காருக்குள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணமாகக் கிடந்தார் ஜெய்சி வேலாயுதம் (46)என்ற நபர். அவரிடம் இருந்து பணம், செல்போன் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இசிபிங்கோ என்ற இடத்தில் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 53 வயதான டேடி நாயுடு என்பவரை கழுத்தை அறுத்துக் கொலைசெய்துவிட்டு டிவி, வீடியோ செட்டை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இசிபிங்கோவிலேயே நடந்த இன்னாரு சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவர் காரோடு கடத்திச் செல்லப்பட்டு கொலைசெய்யப்பட்டார். அவரது உடல் உம்லசி என்ற இடத்தில் புதருக்குள் கிடந்தது.
அடுத்தடுத்து இந்திய வம்சாவளியினர் குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது இச் சமூக மக்களிடையே பிதீயைப் பரப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications