For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் அருகே வெடிகுண்டுக் குவியல் கண்டுபிடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே வெடிகுண்டுக் குவியலை போலீஸார் கண்டுபிடித்து, 2 பேரைக் கைதுசெய்தனர்.

கூடங்குளம் அருகே உள்ளது கூத்தங்குழி கிராமம். கடலோரக் கிராமமான கூத்தங்குழியில், கடந்த வாரம் பாத்திமாநகர் பகுதியில் 21 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதன் பின்னர் மேல கூத்தங்குழியில் நடந்த சோதனயில் 13 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது 34 வெடிகுண்டுகள் பிடிபட்டன. இதுதொடர்பாக மூக்கன், லயோலா ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

கூத்தங்குழியில் தொடர்ந்து வெடிகுண்டுகள் குவியல் குவியலாக கிடைத்து வருவது அப்பகுதியில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X