மனைவி, 2 மகன்களைக் கொன்றவர் கைது

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே மனைவி, இரண்டு மகன்களை கல்லால் அடித்துக் கொலை செய்துஉடல்களை கிணற்றில் வீசிய கொடூர நபரை போலீஸார் கைது செய்தனர்.

பாவலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிவக்குமார், சந்தோஷ் ஆகிய இரு மகன்கள்.

திருமணத்திற்குப் பின் வெளிநாடு சென்ற சக்திவேல் 10 ஆண்டுகளாக அங்கு வேலை செய்து விட்டு மீபத்தில்தான்ஊர் திரும்பினார். ஊர் திரும்பிய அவரை ராஜேஸ்வரி மதிக்கவில்லையாம்.

இதனால் சக்திவேலுக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்துள்ளது. இதனால் அடிக்கடி சண்டைபோட்டு வந்துள்ளனர்.

இந் நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு வெளியே கிடந்த பெரிய பாறாங் கல்லை எடுத்துராஜேஸ்வரி, மகன்கள் ஆகியோரின் மீது போட்டுள்ளார் சக்திவேல்.

இதில் மூவருமே தலை நசுங்கிப் பலியாயினர். இதையடுத்து உடல்களை அருகில் இருந்த கிணற்றில் வீசினார்.

பின்னர் சங்கராபுரம் காவல் நிலையம் சென்று அவர் சரணடைந்தார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+