ஆந்திராவில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
நிஸாமாபாத்:
ஆந்திர மாநிலம் நிஸாமாபாத் மாவட்டத்தில் 10 நக்ஸலைட்டுகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றவுடன் நக்ஸலைட்டுகளுடன் பேச்சுவார்த்தைகள்தொடங்கின. ஆனால், உடனே முறிந்து போன அந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து போலீஸ்-நக்ஸல்கள் மோதல் தீவிரமாகியுள்ளது.
முதல்வர் ரெட்டியின் உயிருக்கும் நக்ஸல்கள் குறி வைத்துவிட்ட நிலையில், இன்று நிஸாமாபாத் மாவட்டத்தில் நடந்த போலீஸ் தாக்குதலில்10 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் நக்ஸல்களின் மாவட்டக் கமிட்டியின் உறுப்பினரும் சிபிஐ (மாவோயிஸ்ட்) தலைவருமான ரமேசும் அடங்குவார்.












Click it and Unblock the Notifications