For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரம் கடலில் எல்லை அறியும் பலகை

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் கடல் பகுதியில், இந்திய கடல் எல்லையைக் குறிக்கும் புதிய பலகைகளை ராமநாதபுரம் நகராட்சிநிர்வாகம் வைத்துள்ளது.

இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி அடிக்கடி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று இலங்கைகடற்படையினரிடம் பிடிபடுவது அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய எல்லையைத் தாண்டி மீனவர்கள் போகவேண்டாம் என வலியுறுத்தப்படுகிறார்கள்.

இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை கடலில் 21 சிறு சிறு தீவுகள் உள்ளன.இவை ராமர் காலத்தில் போடப்பட்ட பாலம் என்று கூறப்படுகிறது. ஆதம்ஸ் பாலம் என்று இப்போது இதுஅழைக்கப்படுகிறது.

இதில் தனுஷ்கோடியிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 5வது பாலம்தான் இந்திய எல்லையாகும். இந்ததீவில் முன்பு இந்திய எல்லையைக் குறிக்கும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடற்காற்று மற்றும்இயற்கைச் சூழ்நிலை காரணமாக அது சேதமடைந்து விட்டது.

இதையடுத்து புதிய, நவீன அறிவிப்பு பலகை தற்போது வைக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில்இந்திய எல்லை குறித்த அறிவிப்பு அதில் இடம்பெற்றுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X