சுனாமி: தமிழகத்துக்கு ரூ. 367 கோடி விடுவித்த மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திற்கு சுனாமி நிவாரணப் பணிகளுக்காக மேலும் ரூ. 367.20 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக நிதியமைச்சர்பொன்னையன் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.
இன்று தமிழக சட்டசபையில் அவை விதி 110ன் கீழ் பொன்னையன் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில், தமிழக அரசுக்கு சுனாமிநிவாரண நிதியாக ரூ. 1,726.72 கோடியை மத்திய அரசு அறிவித்தது.
இதில் ரூ. 250 கோடி மட்டுமே முதல் கட்டமாகத் தரப்பட்டது. அதன் பிறகு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து பட்ஜெட்உரையிலும் குறிப்பிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது ரூ. 367.20 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதையும் சேர்த்து இதுவரை ரூ. 617.20 கோடி நிதியைமத்திய அரசு விடுவித்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications