புளோரிடா கல்வி வாரிய உறுப்பினராக இந்தியர் நியமனம்
நியூயார்க்:
புளோரிடா மாகாணத்தின் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களைக் கண்காணிக்கும் முக்கிய வாரியத்தின் உறுப்பினராக இந்தியரானடாக்டர் அக்ஷய் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் தேசாய், ஒரு டாக்டர் ஆவார். இவரை வாரிய உறுப்பினராக அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரரும் புளோரிடாகவர்னருமான ஜெப் புஷ் நியமித்துள்ளார்.
புஷ்ஷின் குடியரசுக் கட்சியின் தீவிர உறுப்பினரான தேசாய், அக் கட்சிக்காக பெருமளவில் நிதி திரட்டித் தந்துள்ளார்.
புளோரிடாவின் 10 உயர் கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்களை (இவற்றின் வருடாந்திர பட்ஜெட் சுமார் ரூ. 4.2 பில்லியன் டாலர்)கட்டுப்படுத்தும் மிக முக்கிய வாரியம் இது. பிரபல அமெரிக்க கல்வியாளர்ளான ஸ்டேன்லி மார்ஷெல், பில் மெக்கொல்லம் ஆகியோர்உள்ளடங்கிய நிர்வாகிகள் பட்டியலில் தேசாயும் இடம் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவு மக்களின் பரிந்துரைக் கமிஷன் தலைவராக தேசாயை அதிபர் புஷ் நியமித்ததுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications