பிகாரில் ஜனாதிபதி ஆட்சி அமல்
டெல்லி:
பிகாரில் நேற்றிரவு ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று இதற்கான உத்தரவை ஜனாதிபதி கலாம் நேற்றிரவில் பிறப்பித்தார்.
சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததாலும், ஆட்சியமைக்க முடியாததாலும்சட்டசபையின் செயல்பாட்டை முடக்கி வைத்தும், ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்ற மத்திய அமைச்சரவை கூடியபோது அதில் ரயில்வேஅமைச்சர் லாலு பிரசாத் யாதவும், உரத்துறை அமைச்சரும் ஜனாதிபதி ஆட்சி அமலாக முக்கிய காரணகர்த்தாவுமான ராம்விலாஸ்பாஸ்வான் ஆகியோர் பங்கேற்கவில்லை.
முன்னதாக பிகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கலாம் என மத்திய அரசுக்கு ஆளுநர் பூட்டா சிங் பரிந்துரைத்தார்.
இதன்மூலம் பிகாரில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த லாலு-ராப்ரி தேவி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications