வீரப்பன்: உயர் நீதிமன்றத்தில் விஜயக்குமார் மனு
சென்னை :
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து விஜயக்குமார் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் தனது கணவர்வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வருகின்றன. அவரை ஏற்கனவே விஷம் வைத்துக்கொன்று விட்டுத்தான் என்கெளண்டர் என்ற பெயரில் அதிரடிப்படையினர் நாடகமாடுகிறார்கள்.
எனவே அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை ஏற்ற உயர்நீதிமன்றம், தர்மபுரியில் தற்போது வீரப்பன் மரணம் குறித்து நடந்து வரும் ஆர்.டி.ஓ விசாரணைக்குப் பின்னர்விஜயக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விஜயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்,
இந்த மனு இன்று தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜு, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசு வழக்கறிஞர் கூறுகையில், ஏற்கனவே வீரப்பன் மரணம் குறித்து தர்மபுரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.
இந் நிலையில் இன்னொரு வழக்குப் பதிவு செய்ய தேவையில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த மனுவை நீதிபதி கற்பகவிநாயகம் தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், விசாரணையை நாளை மறுநாளைக்கு ஒத்திவைத்தனர்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications