கங்குலியை நீக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை :
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து செளரவ் கங்குலியை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கைத் தொடுத்த வழக்கறிஞருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பழனிச்சாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்தார். அதில்,இந்திய கிக்கெட் அணியின் கேப்டனாக செயல்படும் கங்குலி தொடர்ந்து தோல்விகளையேக் கொடுத்து வருகிறார்.
எனவே அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். மேலும், டெஸ்ட் போட்டிகளுக்கு ராகுல் டிராவிட்டையும், ஒரு நாள்போட்டிகளுக்கு வீரேந்திர ஷேவாக்கையும் கேப்டனாக நியமிக்க வேண்டும் எனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள்,இந்திய அரசியல் சாசனச் சட்டப்படி இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. எனவே இது தள்ளுபடி செய்யப்படுகிறது.
பொது நல மனுவை தவறான முறையில் பயன்படுத்தி, விளம்பரம் தேட முயன்ற வழக்கறிஞர் பழனிச்சாமிக்கு ரூ. 10,000அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை வழக்கறிஞர் சங்க நிதியில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications