தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: போலீஸ் உஷார் நிலை
சென்னை:
சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க ரகசிய போலீஸாார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகபோலீஸ் கமிஷனர் நடராஜ் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் ஏராளமான துப்பாக்கிகள்மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இவை சென்னையில் இருந்து சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம்கொண்டு வரப்பட்டதாக பெங்களூர் போலீசார் கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து தமிழ்நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் நடராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,
பெங்களூரில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதை தொடர்ந்துசென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உளவுப் பிரிவு போலீஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவு போலீஸார் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில்ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாறுவேடத்தில் இருப்பார்கள் என்றார்.
இதே போல தமிழகம் முழுவதுமே கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications