கல்லூரியில் குண்டு வெடித்து 3 மாணவிகள் காயம்
சேலம்:
வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்வது குறித்த விளக்க நிகழ்ச்சியின்போது வெடிகுண்டு வெடித்து 3 மாணவிகள்படுகாயமடைந்தனர், ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
சேலம் வைஸ்யா கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களுக்கான 3 நாள் புத்தாக்கப் பயிற்சி முகாமுக்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்தால், அவற்றை எப்படி செயலிழக்கச் செய்வது என்பது குறித்த விளக்க நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சேலம் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்,நிஜமான கையெறி குண்டு ஒன்றை கொண்டு வந்திருந்தனர்.
குண்டை செயலிழக்க வைத்துக் கொண்டிருக்கும்போது அது திடீரென எதிர்பாராதவிதமாக வெடித்து விட்டது. அப்போது இந்தநிகழ்ச்சியை பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வந்து பார்த்துக் கொண்டிருந்த நிஷா பானு, ஆரோக்கியமேரி, தீபலட்சுமிஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்களை தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்றனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஒரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications