சென்னை கடற்கரைக்கு வந்த டால்பின்கள்
சென்னை:
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கம் கடலில் டால்பின்கள் கூட்டமாக வந்ததால் அப்பகுதி மக்கள் வியப்படைந்து கூட்டம் கூட்டமாகசென்று அவற்றை வேடிக்கை பார்த்தனர்.
சென்னை கடல் பகுதியில் டால்பின்கள் வருவது அரிதான விஷயம், அதிலும் கூட்டம் கூட்டமாக டால்பின்கள் இதுவரைவந்ததில்லை. இந் நிலையில் சென்னை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் கடல்பகுதியில் டால்பின்கள் கூட்டமாக வந்ததால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
40 டால்பின்கள் வரை ஈஞ்சம்பாக்கம் கடல் பகுதிக்கு வந்தன. கரைக்கு வந்த அவை விளையாடின. இவற்றைப் பார்த்த அப்பகுதிமக்கள், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கடல் ஆணை பாதுகாவலர்கள் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்குத் தகவல்கொடுத்தனர்.
இதையடுத்து கடல் ஆமை பாதுகாவலர்கள் அமைப்பினர் விரைந்து சென்று டால்பின்களை கடலுக்குள் அனுப்ப நடவடிக்கைஎடுத்தனர். கொட்டிவாக்கம் கடல் பகுதி வரை அவர்கள், டால்பின்களை கடலுக்குள் அனுப்பினர். பின்னர் அந்த டால்பின்கள்கடலுக்குள் சென்று விட்டன.
இந்த டால்பின்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அழகான கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில்இந்த டால்பின்கள் இருந்தன. 6 முதல் 7 அடி வரை நீளமுடையதாக இருந்தன. ஒரு குட்டி டால்பினும் இக்கூட்டத்தில் இருந்ததாகஅவற்றைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விளையாடிக் கொண்டும், கடல் நீரில் டைவ் அடித்தவாறும் அவை காணப்பட்டதை அப்பகுதி மக்கள் கூட்டமாக நின்றுவேடிக்கை பார்த்தனர்.












Click it and Unblock the Notifications