சுனாமி அலைகள் அல்ல: வானிலை ஆராய்ச்சி நிலையம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெல்லை மற்றும் குமரிக் கடலோர பகுதிகளில் கடல் நீர் ஊருக்குள் புகுந்ததற்கு சுனாமி அலைகள் காரணமல்ல என்று சென்னைவானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பூகம்பவியல் பிரிவு தலைவர் ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ராஜாக்கமங்கலம் துறையில், ஆயிரங்கால் பொழிமுகம் என்ற கடலோர கிராமத்தில் கடல் சீற்றம்ஏற்பட்டுள்ளது.
அலைகள் வழக்கத்தை விட அதிகமாக உயர்ந்ததால் சுனாமி அலை என்று மக்கள் பயந்துள்ளனர். சுனாமி தாக்குதலுக்குப் பிறகுபலமுறை நில அதிர்வுகள் கடலுக்கடியில் ஏற்பட்டுள்ளன.
ஆனால் நேற்று நில அதிர்வு எதுவும் பூகம்பவியல் அளவையில் பதிவாகவில்லை. எனவே இது நிச்சயமாக சுனாமி அலை அல்ல,எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை. பொதுவாக மார்ச் மாதத்தில் அலைகளின் எழுச்சி சற்று அதிகமாகவே இருக்கும்என்றார் ராவ்.












Click it and Unblock the Notifications