அப்பீல் மேல் அப்பீல்: பாலாஜிக்கு அபராதம்!
டெல்லி:
மொகாலி டெஸ்ட் போட்டியில் தேவையில்லாமல் அவுட் கேட்டதால் பந்து வீச்சாளர் பாலாஜிக்கு அபராதம்விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 8ம் தேதி மொகாலியில்தொடங்கியது. இப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான், 312 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில்தமிழக வீரர் பாலாஜி அபாரமாகப் பந்து வீசி பாகிஸ்தானின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பாகிஸ்தானின் 2வது இன்னிங்சிலும் பாலாஜி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொத்தம் 9 விக்கெட்டுகளைக்கைப்பற்றிய பாலாஜிக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.
ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் எல்பிடபிள்யூ ஆனதாக தேவையில்லாமல், அடிக்கடி, பலமுறை அவுட் கேட்டதாகஅம்பயர்களான ரூடி குயர்ட்சன், டேரல் ஹேர், மற்றும் ஹரிகரன் ஆகியோர் பாலாஜி மீது புகார் கூறினர்.
போட்டி நடுவர் கிறிஸ் பிராடிடமும் புகார் செய்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் கிறிஸ் பிராட், பாலாஜியின் போட்டித் தொகையில் (ஊதியத்தில்)30 சதவீதம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.