For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக, அதிமுக மெளனம்- பாஜக கோபம்

By Staff
Google Oneindia Tamil News

ராஞ்சி & சென்னை:

ஜார்க்கண்டில் புதிதாய் பதவியேற்றுள்ள பா.ஜ.க. முதல்வர் அர்ஜூன் முண்டா வரும் 15ம் தேதியே சட்டசபையில்பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஆளுநர் உதவியோடு போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாமலேயே முதல்வர் பதவியில் அமர்ந்த ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா தலைவர் சிபு சோரன், வேறு வழியின்றி பதவியை விட்டு விலகினார்.

அவரை முதல்வராக்க உதவி செய்த காங்கிரஸ் மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந் நிலையில் தனக்கு ஆதரவளித்த 5 சுயேச்சைகளுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கி முதல்வராகப் பதவியேற்ற முண்டா, 15ம்தேதியே பெரும்பான்மையை நிரூபிப்பதாக அறிவித்துள்ளார். மெஜாரிட்டியை நிரூபிக்க அவருக்கு 21ம் தேதி வரை காலஅவகாசம் உள்ளது. ஆனாலும் முன் கூட்டியே நம்பிக்கை வாக்கு வெற அவர் முடிவு செய்துள்ளார்.

திமுக-அதிமுக மெளனம்: பாஜக கோபம்

இதற்கிடையே இன்று சென்னை வந்த பாஜக முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு நிருபர்களிடம் பேசுகையில்,

ஆளுநர்கள் மத்திய ஆளும் கட்சியின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் காங்கிரஸ் தான்.டெல்லியில் திரைக்கதை வசனம் எழுதப்பட்டு ஜார்க்கண்ட்டில் நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

இதில் தனக்கு சம்பந்தமில்லை என்று காங்கிரஸ் தலைமை தப்ப முயல்வதை ஏற்க முடியாது. கோவாவிலும் ஜார்க்கண்டிலும்ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது காங்கிரஸ். இந்தப் பாவத்தை எங்கு போனாலும் தொலைக்க முடியாது.

கோவா, ஜார்க்கண்டில் இவ்வளவு நடந்திருக்கிறதே. ஆனால், திமுக வாய்மூடி மெளனமாக இருப்பது ஏன்? அதிமுகவும்மெளனமாய் இருப்பது ஏன்? வியப்பாக இருக்கிறதே என்றார் நாயுடு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X