இந்தியாவுக்கு ஆயுதங்கள் தர அமெரிக்கா தயார்
டெல்லி:
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்தால் அதுதெற்காசியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே பெரும் நன்மை தரக் கூடியதாக இருக்கும் என்று அமெரிக்கவெளியுறவுத் துறை அமைச்சர் கான்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
இந்தியா வந்துள்ள ரைஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கை சந்தித்துப் பேசினார்.
அப்போது, பாகிஸ்தானுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்கும் அமெரிக்காவின் முடிவு குறித்து நட்வர்சிங், கவலை தெரிவித்தார்.
இச் சந்திப்புக்குப் பின் ரைஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவின் ஆயுதத் தேவைகள் குறித்து நாங்கள்பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியாவுக்கு ஆயுதங்கள் தர அமெரிக்கா தயார்.
ஆசியப் பகுதிகளில் அமைதி ஏற்படவேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நெருங்கிய நட்பு வைத்துக் கொள்ளவே அமெரிக்காவிரும்புகிறது.
டிசம்பர் 26ம் தேதி இந்தியாவில் சுனாமியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது வருந்தத்தக்கது. சுனாமியால் பெரும்இழப்பு ஏற்பட்ட போதிலும் இந்தியா, அதை உடனடியாக சமாளித்தது பாராட்டத்தக்கது என்றார்.
அமைச்சர் நட்வர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக ரைஸ், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இச் சந்திப்பு நடந்தது.












Click it and Unblock the Notifications