இந்தியா 407 ரன்களுக்கு ஆல்-அவுட் !
கொல்கத்தா:
கொல்கத்தா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 407 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்றுதொடங்கியது. டாஸில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
வழக்கம் போல நேற்றும் சேவாக் அதிரடியாக விளையாடினார். மீண்டும் ஒரு செஞ்சுரியை நெருங்கிய அவர், 81ரன்களில் ஆட்டமிழந்தார். காம்பிர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
திராவிட்டும் நேற்று சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 110 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டத்தின்அடுத்த சிறப்பம்சம் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டியில் 10,000 ரன்களை குவித்தது தான். அவர் 37வது ரன் எடுத்தபோது இந்த சாதனையைப் படைத்தார்.
நேற்று ஆட்ட நேர முடிவில் இந்தியா, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மீதமுள்ள 4 விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வீழ்ந்தன. உணவுஇடைவேளைக்கு முன்னதாகவே இந்தியா 407 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.












Click it and Unblock the Notifications