திமுகவை திணறடிக்கும் புரட்சி தலைவி: அமைச்சர் புளகாங்கிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் தேர்தலுக்குப் பின் திமுகவினர் நிரந்தரமாக சட்டமன்றத்துக்கு வெளியில் தான் இருக்கப் போகிறார்கள் என்று அமைச்சர்விஸ்வநாதன் கூறினார்.

தமிழக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்தது. இதில் போக்குவரத்துறைஅமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:

திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையும் மின்துறையும் சீரழிந்து கிடந்தன. போக்குவரத்துறையில் மட்டும் ரூ. 1,500 கோடிநஷ்டம். புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா முதல்வரான பிறகு தான் போக்குவரத்துறை லாபத்தில் இயங்கத்தொடங்கியது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பஸ் கட்டணம் குறைவு. டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியபோதும் பஸ் கட்டணத்தைபுரட்சித் தலைவி உயர்த்தவில்லை. உயர்த்தவும் போவதில்லை என அம்மா கூறிவிட்டார்கள்.

மின்சாரத்துறையில் திமுகவினரால் நஷ்டம் ரூ. 5,500 கோடி. அதையும் புரட்சித் தலைவியின் ஆட்சியில் சரி செய்துவிட்டோம்.

இந்த ஆட்சியில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (அமைச்சர் அய்யா.. அந்த தர்மபுரிபஸ் எரிப்பு விஷயம்...). தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது.

அம்மா ஆட்சியின் சாதனைகளை பொறுக்க முடியாமல் திமுகவினர் செயல்படுகின்றனர். சட்டசபையில் புரட்சித் தலைவியின்கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திமுகவினர் திணறுகிறார்கள். இதனால் எப்படியாவது சட்டசபையில் குழப்பத்தைஏற்படுத்த வேண்டும் என்ற முடிவோடு தான் திமுக எம்எல்ஏக்கள் அவைக்கே வருகிறார்கள், வெளிநடப்பு செய்கிறார்கள்.

இதே நிலை தொடர்ந்தால், வரும் தேர்தலில் நிரந்தரமாக வெளியே இருக்கும்படி மக்கள் தீர்ப்பளித்துவிடுவார்கள் என்று போடுபோட்டா அமைச்சர் விஸ்வநாதன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+