நாகப்பா கொலை: தமிழக அதிரடிப் படையினரிடம் கர்நாடகம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா மர்மமான முறையில் காட்டுப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதுதொடர்பாக தமிழக அதிரடிப்படையினரிடம், கர்நாடக அரசின் விசாரணைக் கமிஷன் இன்று விசாரணையைத்தொடங்கியது.

வீரப்பனால் கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் பிரமுகருமானநாகப்பா, கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி காட்டில் பிணமாக அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரை வீரப்பன் சுட்டுக் கொன்றதாகக் கூறப்பட்டது. ஆனால், தான் நாகப்பாவைக் கொல்லவில்லை என்றும்அவரை தமிழக அதிரடிப்படையினர் தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருந்தான்.

இந் நிலையில் தனது கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றுநாகப்பாவின் மனைவி பிரமிளா கர்நாடக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற கர்நாடக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி வைத்தியநாதாவைத் தலைவராகக் கொண்ட 6பேர் கொண்ட கமிஷனை அமைத்தது. இந்தக் குழுவினர் இன்று ஊட்டி வந்தனர்.

அரசினர் விருந்தினர் மாளிகையில் அவர்கள் தங்களது முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தமிழகஅதிரடிப்படை வீரர்கள், அதிகாரிகளிடம் அவர்கள் விசாரணை மேற்கொள்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+