ஜப்பானில் நிலநடுக்கம்:250 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ:
ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தில் 250 பேர் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் தரைமட்டமாயின.
ஜப்பானிலுள்ள யூஷூ தீவில் இன்று காலை 10.53 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் ஸ்கேலில் 7.0 ஆகபதிவாகியிருந்தது.
இந்த திடீர் நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின. இதில் இடுபாடுகளில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸாரும் மீட்புப் படையினரும் விரைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே மேலும்ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே சுனாமியின் அறிகுறி தான் இது என்று கூறப்பட்டது. ஆனால் பிறகு இதை விஞ்ஞானிகள்மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications