வீரப்பன் காட்டில் யானைகள் கணக்கெடுப்பு!
ஓசூர்:
வீரப்பன் நடமாடிய காட்டுப் பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி மே மாதம் முதல் தொடங்குகிறது.
தென்னிந்தியாவில் வனப் பகுதிகள் முழுவதுமே இந்த கணக்கெடுப்பு மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்ஒரு பகுதியாக, முதுமலை சரணாலயம், நீலகிரி வடக்கு வனக் கோட்டம், டாப்ஸ்லிப் இந்திரா காந்தி சரணாலயம், சத்தியமங்கலம்,ஈரோடு, கிருஷ்ணகிரி வனப் பகுதிகள் உள்ளிட்டவற்றில் யானைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
வீரப்பனால் வதம் செய்யப்பட்டது போக மிச்ச மீதி யானைகள் இப்போது நிம்மதியுடன் காட்டில் சுற்றி வருகின்றன.
வீரப்பன் இருக்கும் வரை காட்டில் எந்த வேலையையும் மேற்கொள்ள முடியாத நிலையில் வனத்துறை இருந்தது. இப்போதுவீப்பன் போய்ச் சேர்ந்துவிட்டதால் அவன் நடமாடிய பகுதிகளில் யானைகள் கணக்கெடுக்கும் பணி அமைதியாகவும்,நிம்மதியாகவும் நடக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications