கிரிக்கெட்: 3வது டெஸ்ட் நாளை தொடக்கம்
பெங்களூர்:
இந்தியா-பாகிஸ்தான் மோதும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூரில் தொடங்குகிறது. இது பாகிஸ்தான்அணியின் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கின் 100வது போட்டியாகும்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. மொகாலியில் நடைபெற்ற முதல்போட்டி "டிராவில் முடிவடைந்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 195 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நாளை தொடங்குகிறது. ஒரு போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் நாளைஇந்தியா களமிறங்கும். தொடரை இழந்தால் பாகிஸ்தான் ரசிகர்களை சமாளிக்க முடியாது என்பதால் எப்படியாவது இந்தப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய பாகிஸ்தான் அணி போராடும்.
இது தவிர இந்தப் போட்டி பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கிற்கு 100வது போட்டியாகும். எனவே அவர் இதில்எப்படியாவது வெற்றி பெறவேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார்.
இந்திய வீரர்களில் கேப்டன் கங்குலியைத் தவிர அனைவருமே நன்றாக விளையாடுகின்றனர். எனவே இந்தப் போட்டியிலாவதுகங்குலி தனது திறமையைக் காட்டுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.