For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லெபனான்: குண்டு வெடிப்பில் இந்தியர் பலி

By Staff
Google Oneindia Tamil News

பெய்ரூட்:

லெபனான் தலைநகர் பெய்ரூட் அருகே வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில் ஒரு இந்தியர், பாகிஸ்தானியர்உட்பட 3 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் அருகே உள்ள ஜூனி நகரில் ஒரு வணிக வளாகத்தில் இன்று அதிகாலை குண்டு வெடித்தது.இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

இந்த குண்டு வெடிப்பில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் உட்பட 3 பேர் இறந்தனர். இதில்இலங்கையைச் சேர்ந்த 2 பேர் உட்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பும் இதே பகுதியில்குண்டு வெடித்து 11 பேர் படுகாயமடைந்தனர்.

சிரியா ஆதரவு லெபனான் அரசுக்கும், சிரியாவுக்கு எதிரான எதிர்க் கட்சிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக லெனானில்தீவிர மோதல் நடந்து வருகிறது. லெபனான் விவகாரங்களில் சிரியா தலையிட எதிர்க் கட்சிகள் தீவிர எதிர்ப்பு காட்டி வருகின்றன.குண்டு வெடிப்புகளையும் நடத்தி வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X