கடல் சுவர் கட்டும் திட்டம்: ஆய்வறிக்கை சமர்பித்தது ஐஐடி
சென்னை:
தமிழக கடலோரப் பகுதிகளை சுனாமி போன்ற பேரழிவுகளிலிருந்து காப்பதற்காக கடலோரப் பகுதிகளில் தடுப்புச்சுவர்கள் அமைப்பது தொடர்பான ஆய்வறிக்கையை சென்னை இந்திய தொழில்நுட்பக் கல்வி மையம் (ஐஐடி)தமிழக அரசிடம் அளித்துள்ளது.
தடுப்புச் சுவர் அமைப்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.மேலும் இதுதொடர்பான ஆய்வறிக்கையை தருமாறு ஐ.ஐ.டிக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த ஆய்வுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 3.59 லட்சம் நிதியும் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஐஐடியின் கடல் ஆராய்ச்சிப் பிரிவினர், நிலவியல், புவியியல் மற்றும் சிவில் என்ஜினியரிங் பிரிவின்ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
தங்களது ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். இத் தகவலை பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தமிழக கடலோரப் பகுதிகளில் நீண்ட கடல் சுவர்களை கட்டுவது தொடர்பான ஆய்வுப் பணிக்குதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அந்த ஆய்வு தற்போது முடிவடைந்து, ஆய்வறிக்கை அரசுக்குசமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில், சுவர் கட்டும் திட்டத்தை அமலாக்க மத்திய அரசு மூலமாக உலக வங்கி,ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடம் நிதியுதவியை தமிழக அரசு கோரும்.
தமிழக கடலோரப் பகுதியின் நீளம் 1,076 கிமீ. இதில் 1,016 கிமீ தூரம் வங்கக் கடல் பகுதியிலும், மீதமுள்ள பகுதிஅரபிக் கடல் பகுதியிலும் உள்ளது.
சுனாமி காரணமாக தமிழகக் கடலோரப் பகுதிகள் முழுமையும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications