இந்தியா-பாக்: டெல்லி போட்டி இடம் மாறுமா?
டெல்லி:
பாகிஸ்தான் அணியுடன் டெல்லியில் நடைபெற உள்ள இறுதி ஒரு நாள் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படக்கூடும் என்றுதெரிகிறது.
இன்சமாம் உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்யணம் செய்து விளையாடி வருகிறது.இந்த இரு அணிகளுக்கும் இடையே 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்கியது.
இதன்பிறகு ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. முதல் ஒரு நாள் போட்டி கொச்சியில் ஏப்ரல் 2ம் தேதி தொடங்குகிறது.
இறுதி ஒரு நாள் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் ஏப்ரல் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியைப்பார்க்கத்தான் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் இந்தியா வருவதாக உள்ளது.
ஆனால் டெல்லி மைதானம் இன்னும் போட்டிக்குத் தயாராகவில்லை. ஆடுகள சீரமைப்புப் பணி இன்னும் முடிவடையவில்லை.இதற்கிடையே ஒரு பகுதிப் பணி முடிவடைந்ததற்கான சான்றிதழை டெல்லி மாநகராட்சியிடம் டெல்லி கிரிக்கெட் சங்கம்கேட்டது.
ஆனால் மாநகராட்சி கொடுக்க மறுத்து விட்டது. இது தொடர்பாக டெல்லி மாநகராட்சி ஆணையாளர் ராகேஷ் மேத்தாகூறுகையில், போட்டியை பார்க்க வரும் ரசிகர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். எனவே பணிகள் முடிவடையாத நிலையில்சான்றிதழ் தரமுடியாது என்றார்.
மைதானப் பணிகள் இன்னும் முடிவடையாததால் டெல்லியில் ஒரு நாள் போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம்ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் "பிட்ச் குழு 29ம் தேதி மைதானத்தை பார்வையிட உள்ளது.
அதன் பிறகே போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுமா என்பது தெரியவரும். இறுதி ஒரு நாள் போட்டியை நடத்த ஏற்கனவேஜெய்ப்பூர் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.