திமுக பிரமுகர் மகன் எரித்துக் கொலை
திருவள்ளூர்:
திருவள்ளூர் திமுக பிரமுகர் மகன் நண்பர்களால் எரித்துக் கொல்லப்பட்டார்.
திருவள்ளூரைச் சேர்ந்தவர் சண்முகம். திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினரான இவரது ஒரே மகன் பாஸ்கர் (வயது 30). கடந்தஇரு தினங்களுக்கு முன் மாலை பாஸ்கர், தனது மோட்டார் சைக்கிளில் அருகிலுள்ள சத்தியவேடு என்ற இடத்திற்கு சென்றவர்பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் ஆந்திர எல்லையான சத்தியவேடு காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பிணம் கிடந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் கிடந்த மோட்டார் சைக்கிளை வைத்து அது பாஸ்கர் என தெரிய வந்தது.
பாஸ்கர் காணாமல் போன அன்று மாலை பாஸ்கர் தன்னுடைய நண்பர்கள் மற்றும் ஒரு இளம்பெண்ணுடன் அந்த காட்டுப்பகுதிக்குள் சென்றதை சிலர் பார்த்துள்ளனர்.
பெண் தகராறில் நண்பர்களே ஒன்று சேர்ந்து பாஸ்கரை கல்லால் அடித்து பின் எரித்துக் கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ்விசாரைணயில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பாஸ்கருடன் சென்ற அவரது நண்பர்களையும், இளம்பெண்ணையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications