மோடியின் லண்டன் பயணம் நள்ளிரவில் ரத்து
அகமதாபாத்:
அமெரிக்காவுக்குச் செல்ல விசா மறுக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் இங்கிலாந்து பயணமும் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டுவிட்டது.
குஜராத்தில் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு, அதை முன்னின்று நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மோடிக்கு அதையே காரணமாகச்சொல்லி விசா தர மறுத்துவிட்டது அமெரிக்கா. இதனால் அந் நாட்டுக்குப் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் மோடி.
இந் நிலையில் நேற்று இங்கிலாந்து செல்லத் திட்டமிட்டார் மோடி. ஆனால், அங்கு மோடியின் உயிருக்கு பாதுகாப்பு இருக்காது என உளவுப்பிரிவுகள் எச்சரித்தன.
இதையடுத்து மோடியை பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் தொலைபேசியில் அழைத்து, இங்கிலாந்துசெல்ல வேண்டாம் என அறிவுறுத்தியதாகவும் அதைத் தொடர்ந்து தனது லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் மோடி ரத்துசெய்துவிட்டதாகவும் அவரது உதவியாளர் தெரிவித்தார்.
ஆனால், மோடியிடம் பிரதமர் பேசவில்லை என்றும், மத்திய உள்துறை அமைச்சர் மட்டுமே பேசியதாகவும் பிரதமர் அலுவலகம்தெளிபடுத்தியுள்ளது.
சிவராஜ் பாட்டீல் பேசிய பிறகு பிரதமரை மோடியே தொடர்பு கொண்டதாகவும், நான் லண்டன் பயணத்தை ரத்து செய்கிறேன் என்றுஅறிவித்ததாகவும் பிரதமர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
நள்ளிரவில் விமானம் ஏற சில மணி நேரங்களே இருந்த நிலையில் மோடியின் பயணம் ரத்தாகியுள்ளது.
மோடிக்கு எதிராக போராட்டங்கள் நடத்த இங்கிலாந்தின் பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. அவரைக் கைது செய்யக் கோரிவழக்குத் தொடரவும் சில அமைப்புகள் திட்டமிட்டிருந்தன.
மேலும் மோடியை குறி வைக்க அல்-கொய்தா, தாவூத் இப்ராகிம் கும்பல்களும் தயாரானதான உளவுப் பிரிவுகள் தகவல் தந்ததையடுத்துஇப் பயணம் கடைசி நேரத்தில் ரத்தாகியுள்ளது.












Click it and Unblock the Notifications