பாரிஸ்: ஆற்றில் மூழ்கி இந்திய சிறுவன் பலி
Subscribe to Oneindia Tamil
பாரிஸ்:
இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினரின் 4 வயது மகன் பாரிஸில் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கி இறந்தான்.
பெங்களூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விடுமுறையைக் கழிப்பதற்காக பிரான்சுக்கு சென்றனர். பாரிஸ் சென்ற அவர்கள்,அங்குள்ள சீன் ஆற்றில் படகில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது 4 வயது மகன் முகமது இஜாஸ் அபுபக்கர், படகில் இருந்து தவறி விழுந்தான். சிறிதுநேரத்தில் அந்த சிறுவன் நீரில் மூழ்கி இறந்து விட்டான்.
இது குறித்து அறிந்த போலீஸார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணைநடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications