For Daily Alerts
Just In
ஹெலிகாப்டர் விழுந்து 2 ஹரியானா அமைச்சர்கள் பலி
சகாரன்பூர்:
உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 2 ஹரியானா மாநில அமைச்சர்கள் பலியானார்கள். இந்தவிபத்தில் ஒரு எம்.எல்.ஏ. உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஹரியானா மாநில விவசாயத்துறை அமைச்சரான சுரேந்தர் சிங், எரிசக்தி துறை அமைச்சர் ஜின்டால் மற்றும்எம்.எல்.ஏ.வேதகோபால் உட்பட 5 பேர் இன்று உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகஹெலிகாப்டரில் சென்றனர்.
சகாரன்பூர் என்ற இடத்திற்கு அருகே மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் தரையில் விழுந்துநொறுங்கியது. இதில் 2 அமைச்சர்களும் பலியானார்கள்.
எம்.எல்.ஏ.வேதகோபால், பைலட் செளகான், மற்றும் வினோத் குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து எவ்வாறுநடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments
Story first published: Thursday, March 31, 2005, 5:30 [IST]