ஜெயலட்சுமி குடும்பத்தினர் கடத்தல் வழக்கு: 2 இனஸ்பெக்டர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஜெயலட்சுமி குடும்பத்தினரை கடத்திய வழக்கில் இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், வெள்ளையன் உள்பட 7 பேர் மீது சிபிஐகுற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஜெயலட்சுமியை அடைவதற்காக இன்ஸ்பெக்டர் மலைச்சாமியுடன் அடிதடி சண்டையில் ஈடுபட்டு யூனிபார்மை கிழித்துக்கொண்ட பெருமை உடையவர் இளங்கோவன்.

ஜெயலட்சுமிக்கும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பை வைத்து தனது அக்காள் மகளுக்கு போலீஸ் வேலைவாங்க முயற்சித்தார்.

இதற்காக ஜெயலட்சுமியிடம் பணம் தந்தார். ஆனால், அதை சுவாஹா செய்த ஜெயலட்சுமியால் வேலை வாங்கித் தரமுடியவில்லை. இதனால் இளங்கோவனை அவரது அக்காள் குடும்பத்தினர் நெருக்க ஆரம்பிக்கவே, ஜெயலட்சுமியைகொடுமைப்படுத்த ஆரம்பித்தார் இளங்கோவன்.

இதனால் ஜெயலட்சுமி தப்பியோடி மாயமானார்

ஒரு கட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன் (இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஜெயலட்சுமியைமேய்ந்தவர்கள்), தனது உறவினரான முருகவேல் உள்ளிட்ட 6 பேருடன் ஜெயலட்சுமியைத் தேடி சிவகாசிக்குச் சென்றார்.

அங்கு ஜெயலட்சுமி இல்லாததால், அவரது வயதான தந்தை அழகிரிசாமி, தாயார், தம்பி சீனிவாசன் ஆகியோர் இந்த காக்கிகள்கும்பல் அடித்து உதைத்து தாக்கியது. பின்னர் அவர்களைக் கடத்திச் சென்று சிறை வைத்து அடித்து, உதைத்தது.

ஜெயலட்சுமி மீதான பாலியல் கொடூர புகாரை விசாரித்து வரும் சிபிஐ, இந்தக் கடத்தலையும் தனி வழக்காகப் பதிவு செய்துவிசாரித்து வந்தது.

இப்போது இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கையை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

அதில் இன்ஸ் இளங்கோவன், இன்ஸ் வெள்ளையன் ஆகியோர் உள்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+