For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிகார கணவன்: 3 குழந்தைகளை எரித்து தாய் தற்கொலை !!

By Staff
Google Oneindia Tamil News

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் சென்பகராமன் புதூரில், கணவரின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்த பெண் தனது 3 குழந்தைகளையும்தீ வைத்து எரித்துக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

செண்பகராமன் புதூரைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 3 குழந்தைகள்.

முரளி மொடா குடிகாரர். எப்போதும் போதையில்தான் இருப்பார். வீட்டு செலுவுக்கும் பணம் தராமல் குடும்பத்தைநடுத்தெருவில் விட்டுள்ளார்.

இதனால் அவருக்கும், மனைவி செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந் நிலையில் நேற்று பகலில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் முரளி.

இதனால் ஆத்திரமடைந்த செல்வி, வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து தனது 3 குழந்தைகளின் மீதும் ஊற்றிதீவைத்தார். பின்னர் தன் மீதும் தீ வைத்துக் கொண்டார்.

முரளியின் கண் எதிரிலேயே 4 பேரும் துடிதுடித்து இறந்தனர். போதையில் இருந்த முரளியால் அவர்களைக் காப்பாற்றக் கூடமுடியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X