விபத்திலிருந்து ஜெயேந்திரர் தப்பினாரா?: ரயில்வே விளக்கம்
சென்னை:
சரக்கு ரயில் மோதுவதிலிருந்து அதிர்ஷ்டவசமாக ஜெயேந்திரர் உயிர் தப்பினார் என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்றுதெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரர் சமீபத்தில் ஆரணிக்கு வேனில் சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே கிராசிங்கில் அவரதுவேன் மீது சரக்கு ரயில் மோதுவது அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். கேட் கீப்பர், ரயில் டிரைவர்,கார்டுகள், ஆரணி ரயில் நிலைய அதிகாரி உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவடைந்து கோட்ட மேலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில்,
விபத்திலிருந்து ஜெயேந்திரர் தப்பியதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயேந்திரரின் வாகனமும் அவருடன் சென்ற வாகனங்களும் சம்பந்தப்பட்ட ரயில்வே கிராசிங்கை மாலை 4.50 மணிக்குகடந்துள்ளன.
ஆனால் சரக்கு ரயில் 5.12 மணிக்குத்தான் அந்த இடத்தைக் கடந்துள்ளது. உண்மையில் அந்த ரயில் ஆரணி ரயில்நிலையத்திலிருந்து 5.03 மணிக்குத்தான் கிளம்பியுள்ளது. எனவே விபத்த தவிர்க்கப்பட்டதாக கூறுவது தவறு.
மணிக்கு 30 கி.மீ. வேகத்தில்தான் சரக்கு ரயில்களை ஓட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஜெயேந்திரர் மற்றும் அவருடன்வந்தவர்களின் வாகனங்கள் மீது ரயில் மோத வாய்ப்பே இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications