ஜெயேந்திரர், விஜயேந்திரரை எதிர்த்து காஞ்சியில் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வந்த ஜெயேந்திரர், விஜயேந்திரரை எதிர்த்து நீதிமன்றம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும், காஞ்சிபுரம் முழுவதும் கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை நகலைப் பெறுவதற்காக ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் இன்றுகாஞ்சிபுரம் நீதிமன்றம் வந்திருந்தனர்.
அப்போது நீதிமன்றத்தின் முன் காஞ்சிபுரம் மக்கள் மன்றம், மண்ணின் மைந்தன் மன்றம் ஆகியவற்றின் சார்பாக ஏராளமான பேர்திரண்டு, இரு சங்கராச்சாரியார்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரு சங்கராச்சாரியார்களும் காஞ்சிபுரத்திற்குள் நுழையக் கூடாது, காமாட்சி அம்மன் கோவிலுக்கும் செல்லக் கூடாது என்றுஅவர்கள் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல, இரு சங்கராச்சாரியார்களுக்கும் எதிராக காஞ்சிபுரம் முழுவதும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications